புதன், 23 ஏப்ரல், 2014

144 தடை என்றால் என்ன


144 தடை என்றால் என்ன 


தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 144 தடை பற்றிய விவரம் வருமாறு:–
மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், மக்களுக்கு தொல்லை ஏற்படுவதை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், பொது அமைதி, கலவர தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காகவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதி, நகரம் ஆகிய இடங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம்.
இந்த தடை காலத்தில், தமிழகத்தில் யாரும் பொது இடங்களில் 5 பேராக கூடி செல்ல முடியாது.
உரிமம் பெற்றுள்ள துப்பாக்கிகளை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதார கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சனி, 19 ஏப்ரல், 2014

ஆரோக்கியம் தரும் காலிபிளவர்

புற்றுநோய் வருவதை தடுக்கும் காலிஃப்ளவர்
ஆரோக்கியம் தரும் காலிபிளவர் 
ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.

காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய்,

இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். நோயெதிர்ப்பு அழற்சி காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.

தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும். நச்சுத் தன்மை நீக்கும்.

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது. இதய நோய்களுக்கு எதிரானவை ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது.

செரிமானத்தை அதிகரிக்க நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.

எடையைக் குறைக்க குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை.

காலிஃப்ளவரில் இருக்கும் போலேட்(folate) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.

புற்றுநோயைத் தடுக்கும் காலிஃப்ளவர் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976
சென்னையில் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்ட நாள்: ஏப்.15- 1976
வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது. * 1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜான்சன் அமெரிக்காவின் 17-வது அதிபரானார். * 1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது. * 1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர். * 1940 - இரண்டாம் உலகப் போர்: நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த நார்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.

* 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். * 1943 - கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். * 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்- பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.

* 1986 - லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது. * 1989 - இங்கிலாந்தின் ஹில்ஸ்பரோ கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர். * 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. * 1997 - மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர். * 2002 - ஏர் சீனாவின் போயிங் விமானம் தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர். * 1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.


இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891

இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். 

தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 

'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

* 1849 - ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.

* 1865 - அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஜோன் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார்.

* 1944 - பம்பாய் துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

* 1986 - வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

* 2007 - தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 35 பேர் கொல்லப்பட்டனர்.

சனி, 12 ஏப்ரல், 2014

வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள்- ஏப்ரல்- 12
வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children) என்பது உலகெங்கும் கோடிக்கணக்கில் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேச நாளாகும். இது ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

இப்பன்னாட்டு நாள் மொரோக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவாத்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வீதியோரச் சிறுவர்களினால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பள்ளிச் சிறுவர்களும் இதனைக் கொண்டாடுகின்றனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1832 - இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையை பிரித்தானிய அரசர் பிறப்பித்தார். * 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது. * 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர். * 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டணி இராணுவத்திடம் வீழ்ந்தது.

* 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. * 1955 - ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது. * 1961 - சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார். * 1980 - லைபீரியாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.

* 1981 - முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது. * 1983 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது. * 1996 - யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல். * 2007 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள்: ஏப்.12
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த உருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7-ம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.

உருசியாவினால் இத்தீர்மானம் ஐநா பொதுச் சபையில் கொண்டுவரப்பட்டது. 1961-ல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

காரைக்குடி வெப்சைட்டிலிருந்து

காரைக்குடி RSU  தொலைபேசி நிலையத்தில்
 காவலராகப் பணிபுரிந்த 

தோழர்.ஆரோக்கியசாமி

10/04/2014 அன்று உடல் நலக்குறைவால் உயிர் நீத்தார். 

காலையில் பணி முடித்தார்.. 
மாலையில் காலன் அவர்தம் உயிர் முடித்தான். 
ஏறத்தாழ 15 ஆண்டுகள் காவலராக ஒப்பந்த முறையில் பல்வேறு ஒப்பந்தக்காரர்களிடம் பணி புரிந்தார். ஒப்பந்த ஊழியராக வாழ்ந்து உயிர் நீத்ததனால் ஒரு பலனும் அவரது  குடும்பத்தாருக்கு கிட்டாது. 

அவரது இறப்பை விட இதுவே பெருங்கொடுமை

"ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் 
அமுல்படுத்தப்பட வேண்டும்" 

என்பது காரைக்குடி சிறப்பு 

மாநாட்டுத்தீர்மானம். 

அது நிறைவேற்றப்படும் அன்றுதான் 

தோழர்.ஆரோக்கியசாமியின் 

ஆன்மா அமைதியடையும் . 


காரைக்குடியில் நேற்று 10-04-2014 அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த தோழர்: ஆரோக்கியசாமி  அவர்களின் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.


15 ஆண்டுகள்  பணிபுரிந்த தோழருக்கு எந்த பலனும் இல்லை என்றும்.ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆயுள் காப்பிட்டுத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது காரைக்குடி சிற(ரி)ப்பு மாநாட்டின் தீர்மானமாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் யாரை தலைவர்/பொதுசெயலர் என்று கூறுகிறார்களோ அவர்கள் இத்தனை ஆண்டு காலம் குறட்டை விட்டு கும்பகர்ண தூக்கம் போட்டது ஏன் ?                                                     (இன்னமுமா இந்த ஊர் நம்மள நம்புது )
             
சிறப்பு மாநாட்டின் அம்சம் என்ன?தொழிசங்கத்தின் பெயரே தெரியாதவர்கள் நடத்தியதுதான் மாநாடு 
TMTCLU என்பதன் அர்த்தம் என்ன. தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் என்பதே அதன் பொருள்.ஆனால் இவர்கள் கூறுவதோ தமிழக தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் என்று.இதில் TMTCLU எங்கே வருகிறது .(TNTCLU )
   TMTCLU என்ற அமைப்பை முறையாக செயல்படுத்தி அச்சங்கத்தை கட்டிக்காத்த பெருமை கடலூர் மாவட்டத்திற்கும் குறிப்பாக எங்கள் தோழன் S.ஆனந்தன்  அவர்களுக்குமே சாரும் . 
 காரைக்குடி மாநாட்டின் தீர்மானம் அனைத்தும் எங்கள் தோழன் ஆனந்தன் அவர்களால் பல ஆண்டுகளுக்கு முன்னரே கடலூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு தெரியபடுத்த விரும்புகின்றோம்.கடந்த 01-10-2009 அன்று முதன் முதலாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.90  ஊதியம் கிடைக்க வழிவகுத்தார் (அதற்க்கு முன் ரூ.53 மட்டுமே பெற்றோம்)பின்பு அசுரவேகம் காட்டி மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கூலி மற்றும் VDA,     EPF ,     ESI    போன்ற அனைத்து சலுகைகளும் பெற்றுதந்துள்ளார்.                              ( மாநில சங்ககளின் உதவி இல்லாமல் )
 இன்று பலர் ESI  கார்டை பயன்படுத்தி மருத்துவ வசதி பெறுகின்றோம் என்றால் அதற்கும் ஆனந்தனே காரணம் .  ஆனந்தன் போராடிப்பெற்று  தந்த ESI  திட்டத்தின் பயனாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெய்வேலி தோழர் ஆறுமுகம் என்பவர் உயிழிழந்தார்.  மாற்று சங்க தோழர் என்றும் பாராமல் அவரின் ஈமச்சடங்கிற்கு ரூ.5000 பெற்றுக்கொடுத்து குடும்பத்திற்கு  இழப்பீடாக ரூ.ஒரு லட்சம் பெற்றதும் EPF திட்டத்தின் பயனாக குடும்ப பென்சன் பெற்றதும் அத்தோழரின் துணைவியாருக்கு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் பணிப்பெற்று தந்தது , விருத்தாசலம் A/C OPPERATOR  தோழர் மணி  அவர்கள் மரணமடைந்த  போது அவரது குடும்பத்திற்கு நிவாரணம் ரூ.25000 (DGM கொடுத்த ரூ.500-ம் சேர்த்து) மற்றும் அவரது துணைவியாருக்கு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர் பணிபெற்றது.தீவிபத்தில் பதிக்கப்பட்ட தோழர் காளியப்பன் மற்றும் தோழியர் 
செல்வி  குடும்பத்திற்கு  வீடு கட்ட ரூ .30000 வழங்கியது   
கடலூர் தோழியர் வள்ளி சிறுநீரக ஆப்பரேசன் பைசா செலவின்றி செய்தது.தோழர் ராஜேஷ் அவர்கள் பாண்டி அரவிந்தர் கண் மருத்துவமனையில் கண்சிகிச்சை செய்தது இப்படி பல வகையில் சங்கம் பாராமல், ஜாதி பார்க்காமல் அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் அனைத்தும் பெற்று தந்துள்ளார்.
NFTCL மாநில செயலர் தோழர்: S.ஆனந்தன் அவர்கள்.
கடலூருக்கு மட்டுமல்ல BSNL தமிழ் நாட்டிற்கே பொதுவானவர் S.ஆனந்தன் 
இன்று தமிழத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் 30 நாட்களுக்கும் ஊதியம் பெற்று தந்துள்ளார் 
காரைக்குடி தோழர்களே இப்பொழுதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை காலம் கடந்து விடவில்லை தோழர் ஆரோக்கியசாமி அவர்களின் குடும்பத்திற்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க வழிவகை உள்ளது.கடலூர் தோழர் ஆனந்தன் அவர்களை அணுகினால் அனைத்து உதவிகளும் செய்ய தயாராகவுள்ளார் கவுரவம் பார்க்காதீர்கள்  உங்களை நம்பியவர்களை ஏமாற்றி விடாதீர்கள்.

                                                  இன்னும் பல தகவல்களுடன் 
                                                         P.தமிழ்ச்செல்வன் 
                                                   மாவட்ட உதவிச்செயலர் 
                                                   NFTCL -நெய்வேலி-கிளை        

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938

கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938
கோபி அன்னான் பிறந்த தினம்: ஏப்ரல் 8 1938கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997-ல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார்.
2001-ல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகதிற்காக உழைததர்காக" அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது.
பிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்க்கான ஐ.நா. அரபு லீக் கூட்டு சிறப்பு பிரதிநிதியாக இருந்தார். ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான் சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார்.

என்று தனியும் இந்த மின்சாரதாகம்

நெல்லை. ஏப். 8–                          

கூடங்குளம் 2–வது அணுஉலையில் அடுத்த மாதம் வெப்பநீர் சோதனை ஓட்டம்

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4–வது அணு உலைகள் அமைப்பதற்காக ரஷியாவுடன் இந்திய அணுசக்தி துறை ஒப்பந்தம் செய்ய இருந்தது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ஒப்பந்தம் ஏற்படுவதில் பின்னடைவு ஏற்பட்டது.இதையடுத்து கூடங்குளத்தில் 3 மற்றும் 4–வது அணுஉலைகள் அமைக்க ரஷியாவுடன் இந்திய அணுசக்தி துறை ஒப்பந்தம் செய்ய அனுமதி அளிக்க வேண்டுமென மத்திய அரசு தேர்தல் கமிஷனுக்கும் கடிதம் அனுப்பியது. அதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன், கூடங்குளத்தில் 3 மற்றும் 4–வது அணுஉலைகள் அமைக்க நேற்று அனுமதி அளித்தது.இந்நிலையில் கூடங்குளத்தில் 1 மற்றும் 2–வது அணுஉலை பணிகள் குறித்து அணுமின்நிலைய வளாக இயக்குனர் சுந்தர் இன்று கூறியதாவது:–கூடங்குளம் முதல் அணுஉலையில் 680 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. முதல் அணு உலையில் 880 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் 880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.2–வது அணு உலையில் மின்உற்பத்தி செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்தமாதம் வெப்ப நீர் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. அதன் பிறகு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 -ன் கருப்புப் பெட்டியின் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது - ஆஸ்திரேலியா



பெர்த்,மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 -ன் கருப்புப் பெட்டியின் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.மாயமான ‘மலேசிய ஏர்லைன்ஸ் எம்எச் 370’ விமானத்தின் கதி, ஒரு மாதமாகியும் இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உள்பட 239 பேரது குடும்பங்களும், தங்கள் குடும்ப உறுப்பினரின் கதி தெரியாமல் கலங்கிப்போய் உள்ளனர்.அந்த விமானம் கடந்த 8–ந் தேதி அதிகாலை 2.40 மணிக்கு நடுவானில் மாயமானபோது நடந்தது என்ன, விமானி அறையில் என்ன பேசப்பட்டது என்பதையெல்லாம் ஒலிப்பதிவு செய்துள்ள விமானத்தின் கறுப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. அதில் உள்ள பேட்டரி ஒரு மாத காலமே இயங்கும் என்பதால் அதன் ஆயுட்காலம் இன்று அல்லது நாளை முடிந்துவிடக்கூடும். எனவே அந்த கறுப்பு பெட்டியை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளுடன் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் ஈடுபட்டுள்ளன.இந்த நிலையில், அந்த விமானத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சீனகப்பல் ‘ஹாய்ஸன் 01’, இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் இருந்து மாயமான விமானத்தினுடையது என கருதப்படுகிற கறுப்பு பெட்டி சிக்னலை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு முறையும், சனிக்கிழமை ஒரு முறையும் அந்த சிக்னலை (ஒலி சமிக்ஞை) கேட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 -ன் கருப்புப் பெட்டியின் சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட ஆஸ்திரெலிய விமானம் சிக்னலை கண்டறிந்துள்ளது என்று ஆஸ்திரேலியா அதிகாரி தெரிவித்துள்ளார். இது மேலும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்று ஆஸ்திரேலியாவின் தேடுதல் பணி அதிகாரி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் வடமேற்கு கடல்பகுதியில் இரண்டு சிக்னல்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை மார்ஷெல் ஹூஸ்டன் தெரிவித்துள்ளார்.முதல் சிக்னல் பெற்றதை அடுத்து 13 நிமிடங்கள் கழித்து மீண்டும் சிக்னல் பெறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த சிக்னல்கள் கேட்டுகும் விதமாக இருந்தது. பெரும்பாலும் இது விமானத்தில் தரவு ரெக்கார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் பரிமாற்றங்கள் இசைவானதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இது மாயமான மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வெளியாகிருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இதனை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க கப்பல் ஆஸ்திரேலியாவிடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.